நாமக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 02.03.2026 மற்றும் 03.03.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.