Type Here to Get Search Results !

Breaking News

6/trending/recent

புதிய செய்திகள்

Show more
(18/5/2026) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று  தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி-II  திட்டத்தின் கீழ்  மாவட்ட அளவிலான  குடிநீர்  மற்றும்  சுகாதாரம்   குழு   மற்றும் திடக்கழிவு   மேலாண்மை விதிகள்    2026  தொடர்பான ஆய்வுக் கூட்டம்  மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப.,  அவர்கள்   தலைமையில்,  மாவட்ட வன அலுவலர்  முனைவர்.ரா.ராஜ்மோகன், இ.வ.ப., அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.
(18/5/2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் திரு. தௌ.சம்சீர் அகமது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கலந்துரையாடி, கோரிக்கை மனு அளித்தனர்.
(18/5/2026) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
(18/5/2026) இருசக்கர வாகன திருட்டு வழக்கில் ஒருவர் கைதுநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றதாக எதிரி மோகன்ராஜ் (22) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் எதிரி மோகன்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
(16/5/2026) கும்பகோணம் அசூர் பைபாஸ் சாலையில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக மாறியுள்ளதால் அடிக்கடி தீப்பற்றி, அதனால் உருவாகும் கடும் புகைமூட்டம் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வை பெரிதும் பாதித்து வந்தது. இந்நிலையில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு குப்பை மேடையை அகற்றி நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.தங்கள்,வினோத் ரவி MLA.,கும்பகோணம் சட்டமன்ற தொகுதி,மாவட்ட கழக செயலாளர்,தஞ்சை கிழக்கு மாவட்டம்.
(16/5/2026) கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்  பணி மாற்றம் அறிவிப்பு...!!!**பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் திருமதி ஜெர்மின் லதா அவர்கள் பணி/ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்...  சிதம்பரம் இன்ஸ்பெக்டர் திரு அம்பேத்கார் அவர்கள் பரங்கிப்பேட்டை க்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.