தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (21.02.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், கூட்டாண்மை சமூகப்பொறுப்பு (CSR) நிதியிலிருந்து பெற்றோரை இழந்த, பெற்றோரால் கைவிடப்பட்ட / ஊனமுற்ற பெற்றோரின் குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் என மொத்தம் 93 குழந்தைகளுக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.