(11/6/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இஆப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.