(17/6/2026) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு A.K. அருண் கபிலன்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 64 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 64 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று புதிதாக 27 மனுக்கள் பெறப்பட்டன.