(5/3/2026) கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்குட்பட்ட சுங்கம், ரவுண்டானா அருகில், தனியார் பங்களிப்புடன் (கோடக் மகேந்திரா) ரூ.3.75 இலட்சம் மதிப்பீட்டில், புனரமைக்கப்பட்ட அங்கன் வாடி மையத்தினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், திறந்து வைத்து, பார்வையிட்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மாநகர தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, உதவி ஆணையர் திரு.கணேசன், மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.தேவகுமாரி, உதவி செயற்பொறியாளர் திரு.குமரேசன், மாமன்ற உறுப்பினர் திருமதி.சுமா விஜயகுமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சதீஷ்குமார், கோடக் மகேந்திரா வங்கி அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.