(4/3/2026) வேலூர் மாநகராட்சி 4வது மண்டலம் வார்டு எண் 33 ரங்கசாமி நகர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2025–2026ன் கீழ் திட்ட மதிப்பீடு ₹2.50லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்களுடன் கலந்து கொண்டு திறந்து வைத்தோம். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.காசு சண்முகம், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.