(4/3/2026) நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பாரம்பரிய உணவு குறித்து வரும் காலங்களில் பழங்குடியின இளைஞர்களிடையே விழிப்புணர்வு மற்றும் பாரம்பரிய உணவினை பாதுகாப்பது குறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் புகைப்படத்துடன் கூடிய காபி டேபிள் புத்தகத்தினை வெளியிட்டு பழங்குடியினர்களுக்கு வழங்கினார்.