(1/3/2026) மதுரை மண்டேலா நகரில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, “15 ஆண்டு ஒன்றிய அரசில் பங்கு வகித்த திமுகவால் தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்தது? காற்றில் கூட ஊழல் செய்தது திமுக. ஒன்றியத்தில் அமைச்சர் பதவி கிடைத்தால் அங்கேயும் ஊழல். ஊழல்களால் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.