(4/2/2026)கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.56க்குட்பட்ட ஒண்டிபுதூர், கல்லரை சாலை பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தூய்மைப்பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, மண்டல சுகாதார அலுவலர் திரு.ராஜேந்திரன், உதவி பொறியாளர் செல்வி.ரோஜா, சுகாதார ஆய்வாளர் திரு.முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.