வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வே.இரா.சுப்புலட்சுமி அவர்கள் இன்று (06.02.2026) வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம்-2030 கருத்துகேட்பு கூட்டத்தை வேலூர் பார்க் இன் பை ரேடிசன் மஹாலில் தொடங்கி வைத்து, வேலூர் மாவட்ட வளர்ச்சிக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்தவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்தவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), திருமதி வி.அமுலு விஜயன் (குடியாத்தம்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு தி.அ.முகமது சகி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பூ.காஞ்சனா அவர்களுடன் கலந்து கொண்டேன்.