(5/6/2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. D CholaRajan
(4/6/2026) நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நடைபெற்ற ‘வருவாய் தீர்வாயம்”(ஜமாபந்தி) இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு ஈமச்சடங்கு மற்றும் தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். D CholaRajan
(3/6/2026) தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். D CholaRajan
(29/5/2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.05.2026) தலைமைச் செயலகத்தில், மாநில தலைமை தகவல் ஆணையர் திரு. முகமது ஷகில் அக்தர், இ.கா.ப., (ஓய்வு), மாநில தகவல் ஆணையர்கள் திரு. அபய் குமார் சிங், இ.கா.ப., (ஓய்வு), திரு. பி. தாமரைக்கண்ணன், இ.கா.ப., (ஓய்வு), திரு. ஆர். பிரியாகுமார், திரு. கே. திருமலைமுத்து, திரு.வி.பி. இளம்பரிதி, திரு. எம். நடேசன், திரு. ஏ. விஜயராம் ஆகியோர் சந்தித்தார்கள். D CholaRajan
(22/5/2026) புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.ரவீந்திர குமார் குப்தா இ.கா.ப., அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். D CholaRajan
(22/5/2026)நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திருமதி. S. பிருந்தா, IPS, அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். D CholaRajan
(21/5/2026) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு கேரளா எல்லை பகுதி புளியரை காவல் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.ஜெயச்சந்திரன் அவர்கள் உள்ளார். D CholaRajan