(20/6/2026) திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார், இ.கா.ப அவர்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்களை நேரில் அழைத்து அவர்களிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் செல்லக்கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ரோந்தை உறுதிப்படுத்தி சட்ட விரோத செயல்களை தடுத்தல் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்கள்.